5714.

ஏந்தினாள்தலையை, ஓர் எழுத அருங் கொம்பு
                            அனாள்;
காந்தன் நின்றுஆடுவான் உயர் கவந்தத்தினை,
'வேந்த ! நீஅலசினாய்; விடுதியால் நடம்' எனா,
பூந் தளிர்க்கைகளான், மெய் உறப் புல்லினாள்.

     ஓர் எழுத அரும்கொம்பு அனாள் - சித்திரத்தில் எழுதமுடியாத
மிக்க அழகுள்ள பூங்கொம்பு போன்ற ஒரு அரக்கர்மகள்; தலையை
ஏந்தினாள் -
(இறந்த கணவனது) தலையைக் கையில் ஏந்திக் கொண்டு;
நின்று ஆடுவான் காந்தன் உயர் கவந்தத் தினை - நின்று கூத்தாடுகின்ற
தன் கணவனது உயர்ந்த உடல் குறையினைப் பார்த்து; 'வேந்த ! நீ
அலசினாய் -
கணவனே ! நீ வெகு நேரம் ஆடியதால் இளைத்து விட்டாய்;
நடம்
 விடுதியால் - கூத்தாடுதலைவிடுவாய்; எனா - என்று சொல்லி;
பூந்தளிர் கைகளால் - மலரையும் தளிரையும் போன்ற தனது கைகளால்;
மெய் உறப் புல்லினாள் - (அரக்கனுடைய) உடலை இறுகத் தழுவிக்
கொண்டாள்.

    முன் செய்யுளின்கற்பனை மேலும் விரிந்து பேரவல வீரத்தைப்
புலப்படுத்திற்று.                                              (47)