இந்திரசித்துபோருக்கு எழுதல் 

5717.

அவ் வழி,அவ் உரை கேட்ட ஆண்தகை,
வெவ் விழி எரிஉக, வெகுளி வீங்கினான்-
எவ் வழி உலகமும்குலைய, இந்திரத்
தெவ் அழிதரஉயர் விசயச் சீர்த்தியான்.

     அவ்வழி -அப்போது;அவ்உரை கேட்ட ஆண்தகை -
அக்ககுமாரன் இறந்தான் என்ற வார்த்தையைக் கேட்ட ஆண்மைக்குணம்
உடையவனும்; இந்திரன்  தெவ் அழி தர உயர் விசயம் சீர்த்தியான் -
இந்திரனாகிய பகைவன் வலி அழியுமாறு உயர்ந்த வெற்றியைக் கொண்ட
பெரும் புகழ் உடையவனுமாகிய மேகநாதன்; வெவ்விழி எரிஉக - (தனது)
கொடிய கண்களினின்று நெருப்புச் சிந்தவும்; எவ்வழி உலகமும் குலைய -
எந்த உலகமும் நடுங்கி வருந்தவும்; வெகுளி வீங்கினான் - கோபம்
மிக்கவனானான்.

     மேகநாதன்இந்திரசித்து எனப்பெயர் பெற்ற வரலாறு 'இந்திரத்தெவ்
அழிதர உயர் விசயச் சீர்த்தியான்' என்ற தொடரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெவ் - பகை; வீங்குதல் - மிகுதல் (வீங்கினான்).                    (1)