அறுசீர் ஆசிரியவிருத்தம் 5720. | ஆர்த்தன,கழலும் தாரும் பேரியும், அசனி அஞ்ச; வேர்த்து, உயிர்குலைய, மேனி வெதும்பினன், அமரர் வேந்தன்; 'சீர்த்ததுபோரும்' என்னா, தேவர்க்கும் தேவர் ஆய மூர்த்திகள்தாமும், தம்தம் யோகத்தின் முயற்சி விட்டார். |
கழலும் தாரும்பேரியும் - இந்திரசித்துஅணிந்திருந்த வீரக் கழல்களும் மாலைகளும் (அவனுடன் சென்ற) முரசங்களும்; அசனி அஞ்ச ஆர்த்தன - இடியும் அஞ்சிப் பின்னிடும்படி மிகுதியாக ஒலித்தன. (அம்முழக்கம் கேட்டு); அமரர் வேந்தன் உயிர்குலைய மேனி வேர்த்து வெதும்பினன் - தேவர் தலைவனான இந்திரன் உயிர் நடுங்க உடல் வியர்த்து அச்சத்தால் வெதும்பி வருந்தினான்; தேவர்க்கும் தேவர் ஆய மூர்த்திகள் தாமும் - எல்லாத் தேவர்க்கும் தலைமைத் தேவர்களான மும்மூர்த்திகளும்; போரும் சீர்த்தது என்னா - போர் உச்சநிலை அடைந்ததுஎன்று; தம்தம் யோகத்தின் முயற்சி விட்டார் - அவரவர் செய்தொழிலின்(படைத்தல், காத்தல், அழித்தல்) முயற்சியைக் கைவிட்டார்கள். மேகநாதன்போருக்குப் புறப்பட்டதைக் கண்ட, இந்திரன், மும்மூர்த்திகள் முதலாயோர் நிலை கூறப்பட்டது. (4) |