இந்திரசித்தைச் சூழ்ந்த படைகளின் பெருக்கம் 5722. | வேல்திரண்டனவும், வில்லு மிடைந்தவும், வெற்பு என்றாலும் கூறு இரண்டுஆக்கும் வாள் கைக் குழுவையும் குணிக்கல் ஆற்றேம்; சேறு இரண்டு அருகுசெய்யும் செறி மதச் சிறு கண் யானை, ஆறு-இரண்டுஅஞ்சுநூற்றின் இரட்டி; தேர்த் தொகையும் அஃதே. |
வெற்பு என்றாலும்- மலைஎதிர்த்துள்ளது என்றாலும்; கூறு இரண்டு ஆக்கும் - அதனை இரு கூறாகப் பளிக்கக்கூடிய; வேல் திரண்டனவும் - வேல் வீரர்கள் படைதிரண்டு வந்தவையும்; வில்லுமிடைந்தவும் - வில்லாளிகளாக நெருங்கி வந்தவையும்; வாள்கை குழுவையும் - வாள் ஏந்திய கையை உடைய படைகளின் கூட்டத்தையும்; குணிக்கல் ஆற்றேம் - இவ்வளவு என்று கண்க்கிட்டுக் கூறும் வலிமை உடையோம் அல்லேம்; இரண்டு அருகு சேறு செய்யும் செறிமதம் - இருபுறத்திலும் நிலத்தைச் சேறாக்கும் மதநீர்ப் பெருக்கையும்; சிறுகண் யானை - சிறிய கண்களையும் உடைய யானைகளின் தொகை; ஆறு இரண்டு அஞ்சு நூற்றின் இரட்டி - ஆறாயிரத்தின் இருமடங்கான பன்னீராயிரம்; தேர்த் தொகையும் அஃதே - தேர்ப் படைகளின் தொகையும் அவ்வளவே (பன்னீராயிரம்) கவிக்கூற்றுவேல், வில், வாள் ஏந்திய வீரர்கள் கணக்கிட முடியாதவர்கள். யானை, தேர்ப்படைகள் ஒவ்வொன்றும் பன்னீராயிரம் ஆகும். (6) |