இராவணனிடம்விடைபெற்று, இந்திரசித்து போர்க்குச் செல்லுதல் 

5728.

ஆயினும்,ஐய ! நொய்தின், ஆண் தொழில் குரங்கை,
                                  யானே,
"ஏ" எனும்அளவில் பற்றித் தருகுவென்; இடர்
                            என்று ஒன்றும்
நீ இனிஉழக்கற்பாலை அல்லை; நீடு இருத்தி'
                            என்னா,
போயினன்-அமரர்கோவைப் புகழொடு கொண்டு
                            போந்தான்.

     ஆயினும் -ஆனாலும்;ஐய ! - ஐயனே!; ஆண் தொழில் குரங்கை -
வீரச் செயலில் சிறந்த இந்தக் குரங்கை; 'ஏ' எனும் அளவில் - மிகச்
சுருங்கிய காலத்தில்; யானே நொய்தின் பற்றி தருகுவென் - நானே எளிதில்பிடித்துக் கொடுப்பேன்; இனி, நீ இடர் என்று ஒன்றும்
உழக்கற்பாலைஅல்லை -
இனிமேல் நீ துன்பம் ஒரு சிறிதையும் கொண்டு
வருந்தவேண்டியதில்லை; நீடு இருத்தி என்னா - நீண்டகாலம்
வாழ்ந்திருப்பாய்என்று சொல்லிவிட்டு; அமரர் கோவைப் புகழொடு
கொண்டு போந்தான் -
தேவர்க்கரசனான இந்திரனை, அவன் அடைந்திருந்த
புகழ்களோடுசிறைப்பற்றிக் கொண்டு போனவனான மேகநாதன்; போயினன் -
அனுமனைநோக்கிப் போர்க்களம் சென்றான்.

     மிக்க அன்பினால், மைந்தன் (மேகநாதன்) தன் தந்தைக்கு வாழ்த்துக்
கூறிவிட்டு, போர்க்களம் சென்றான் என்பது கருத்து.                (12)