5744.

வெள்ளம் ஓர் நூறுடை விற் படை என்பார்;
துள்ளிய வாட்படை சொல்லிட ஒண்ணா,
பொள்ளல் தரும் கரப் பூட்கையும் அஃதே;-
கள்ள அரக்கனைச்சுற்றினர் காப்பார்.*

     கள்ள அரக்கனைச்சுற்றினர் காப்பார் - வஞ்சம் நிரம்பிய
இந்திரசித்துவைச் சுற்றிப் பாதுகாப்பவர்; விற்படை ஓர் நூறுடை வெள்ளம்
என்பார் -
வில்லேந்திய படைஓர் ஒரு நூறு வெள்ளம் எனும் கணக்கினர்
ஆவர்; துள்ளிய வாட்படை சொல்லிட ஒண்ணா - துள்ளிப் பாயும் வாள்
ஏந்திய படைஞர் கணக்கிட முடியாதவராம்; பொள்ளல் தரும் கரப்
பூட்கையும் அஃது -
துவாரம் உடைய துதிக்கையை உடைய யானைப்
படையும் அதுபோலவே சொல்ல இயலாத அளவினவாகும்.

    முகத்திற்பூட்டியது போன்ற கையை உடைமையால் யானைக்குப் பூட்கை
என்பது பெயர். 'ஏ' காரம் அசை.                                 (28)