5746.

ஆழியின்ஆய அரக்கர் பெரும் படை
ஏழ் உலகும் இடம்இல் என ஈண்டிச்
சூழும் எழுந்தனர்தோன்றினர்தம்மைக்
கோழியின் ஒக்குவ கூவிடுகின்றான்.*

(அனுமன்)

     ஏழ் உலகும்இடம்இல் என - ஏழ் உலகங்களும் இனிஇவர்
இயங்கற்கு இடம் இல்லை என்று சொல்லும்படி; ஆழியின் ஆய அரக்கர்
பெரும்படை -
கடல்போலப் பெருகிய அரக்கர் சேனையாக; ஈண்டிச் சூழும்
எழுந்தனர் தோன்றினர் தம்மை -
நெருங்கிச் சூழ்ந்து புறப்பட்டுத்
தோன்றியவர்களை; கோழியின் ஒக்குவ - கோழி கூப்பிடுவது போல;
கூவிடுகின்றான் -
அழைக்கின்றான்.

     அனுமன் அரக்கர்சேனையைப் போருக்கு அழைப்பது கோழி கூவுதல்
போல் உள்ளது என்பதாம்.                                  (30)