5747.

மாருதி கூவமகிழ்ந்தனன் ஆகி,
கூரிய புந்தியின்கோவன் குறிக்கொடு,
கார் அன மேனிஅரக்கர்கள் காணா,
வாரிகளூடு மடுத்தனவாளி.*

     மகிழ்ந்தனன்ஆகி மாருதி கூவ - மகிழ்ச்சி அடைந்துஅனுமன்
அழைக்க; கூரிய புந்தியின் கோவன் குறிக்கொடு - நுண்ணுணர்வின்
தலைவனாய அனுமனது குறிப்பைக் கொண்டு; கார்என மேனி அரக்கர்கள்
காணா -
கருமை நிறம் பெற்ற உடம்புடைய அரக்கர்கள் கண்டு (விட்ட);
வாளி - அம்புகள்; வாரிகள் ஊடு மடுத்தன - கடலின் கண் போய்
விழுந்தன.

     சீறி எழுந்தஅரக்கர்தம் அம்புகள் கணக்கிலவாதலின் கடலில் வீழ்ந்தன.
கோவன் - அரசன் நுண்ணறிவில் திறன் வாய்ந்தவன் என்பது
 அனுமனைக்
குறித்தது.'நன்குணர் மாருதி' (கம்ப. 4402) என்றதும் நோக்குக.         (31)