5749.

இந்திரன்முன்பும் இடும் திரள் சோதிச்
சந்திர வெண்குடை தான் எதிர் கண்டான்;
அந்தம் இல்கேள்வியன் ஆனைகள் காணா,
சிந்தை உவந்து,சிரித்து உடன் நின்றான்.*

     அந்தம் இல்கேள்வியன்  - முடிவற்ற கேள்விஞானத்தில் நிரம்பப்
பெற்றவன் ஆகிய அனுமன்; ஆனைகள் காணா - இந்திர சித்துவைக்
காத்துச் சுற்றிலும் நிற்கும் ஆனைத்திரளைக் கண்டு; இந்திரன் முன்பும் இடும்
திரள் சோதிச் சந்திர வெண்குடை தான் எதிர்கண்டான்  -
இந்திரனுக்கு
முன்னால் இடப்படும் சந்திரமயமான வெண்குடையையும் எதிர்கண்டு; சிந்தை
உவந்து -
இந்திரசித்து இங்கேதான் உள்ளான் என்று மனம் மகிழ்ந்து; சிரித்துஉடன் நின்றான் - சிரித்து கூட நின்றான்.

     இந்திரன் முன்புஇடும் சந்திர வெண்குடை அவனை வென்றமையால்
இந்திரசித்துவுக்கு உரியதாயிற்று. சுற்றிலும் கரிய ஆனைத் திரளின் இடையில்
சந்திர வெண்குடை கண்டு இந்திர சித்துவைக் கண்டு கொண்டான் அனுமன்
என்க.                                                  (33)