5758.

வெப்புஅடைகில்லா நெஞ்சில், சிறியது ஓர் விம்மல்
                                கொண்டான்;
'அப்பு அடை வேலைஅன்ன பெருமையார்,
                                ஆற்றலோடும்
ஒப்புஅடைகில்லார், எல்லாம் உலந்தனர்; குரங்கும்
                                ஒன்றே !
எப் படை கொண்டுவெல்வது, இராமன் வந்து
                       எதிர்க்கின் ?' என்றான்.

     வெப்புஅடைகில்லா நெஞ்சில் - (இதுவரை வருத்தத்தால்)தவிப்பு
அடையாத தனது உள்ளத்தில்; சிறியது ஓர் விம்மல் கொண்டான் - ஒரு
சிறுஏக்க உணர்ச்சி கொண்டான் (மற்றும்); அப்பு அடை வேலை - நீர்
நிறைந்தகடல் போன்ற; அன்ன பெருமையோர் - (அளக்க ஒண்ணாப்)
பெருமைஉடையவர்களும்; ஆற்றலோடும் ஒப்பு அடைகில்லார் - தம்
வல்லமையுடன்ஒப்புமை அடையப் பெறாதவர்களுமான; எல்லாம்
உலர்ந்தனர் -
அரக்கவீரர்கள் யாவரும் (இப்போரில்) அழிந்தனர்; குரங்கும் 
ஒன்றே ! -
(இவ்வளவு வீரர்களையும் கொன்ற) குரங்கும் ஒன்றேதான்
உள்ளது; இராமன்வந்து எதிர்க்கின் - (இனி மற்ற வானரங்களுடன்)
இராமன் வந்து நம்மைஎதிர்த்துப் போர் புரிந்தால்; எப்படை கொண்டு
வெல்வது ? என்றான் -
எந்தப் படைகளைக் கொண்டு எதிர்த்து வெற்றி
கொள்வது ? என்றும் சிந்தைகொண்டான்.

     போரில் வல்லபலரையும் கொன்ற அனுமனைக் கண்டு வியந்த
மேகநாதன் இது போன்ற வானர வீரர்களுடன் இராமன் வந்து போர் செய்தால்
வெல்வது எப்படி என்று சிந்தனை செய்தான்.                      (42)