5760.

'கானிடைஅத்தைக்கு உற்ற குற்றமும், கரனார்
                                பாடும்,
யானுடை எம்பிவீந்த இடுக்கணும், பிறவும் எல்லாம்,
மானிடர்இருவராலும், வானரம் ஒன்றினாலும்,
ஆனிடத்து உள;என் வீரம் அழகிற்றே அம்ம !'
                               என்றான்.

     கானிடைஅத்தைக்கு உற்ற குற்றமும் - தண்டக வனத்திடத்துஎன்
அத்தையாகிய சூர்ப்பணகைக்கு நேர்ந்த மூக்கு முதலியன அறுப்புண்ட
குறைபாடும்; கரனார் பாடும் - கரன் இறந்ததும்; யானுடை எம்பி வீந்த
இடுக்கணும் -
என்னுடைய தம்பி அக்க குமாரன் அழிந்த துன்பமும்; பிறவும்
எல்லாம் -
மற்றைய (அசோகவனம் அழிந்தமை முதலியனவுமான) யாவும்;
மானிடர் இருவராலும் - இரண்டு மனிதர்களாலும்; வானாம் ஒன்றினாலும் -
ஒரு குரங்கினாலும்; ஆனிடத்து - உண்டாயின என்றால்; என் உளவீரம் -
என்னிடத்து உள்ள வீரம்; அழகிற்றே - அழகுடையதே !; அம்ம ! என்றான்- என்ன ஆச்சரியம் என்று (இந்திரசித்து) கூறினான்.

     
'இவ்வளவு துன்பமும், இருமானிடர்களாலும், ஒரு குரங்கினாலும்
நேர்ந்தது என்றால், என் வீரம் அழகிற்றே' என்று இகழ்ச்சிக் குறிப்புடன்
பேசினான் இந்திரசித்து.

     ஆனிடத்து -உண்டாயின என்றால். ஆயின இடத்து என்பது
ஆனிடத்து எனத் தொக்கது.                                    (44)