அரக்கர் படையுடன்அனுமன் பொருதல்

5769.

அக் காலை,அரக்கரும், யானையும், தேரும், மாவும்,
முக் கால் உலகம்ஒரு மூன்றையும் வென்று முற்றிப்
புக்கானின் முன்புக்கு, உயர் பூசல் பெருக்கும்
                                   வேலை,
மிக்கானும்,வெகுண்டு ஓர் மராமரம் கொண்டு
                                   மிக்கான்.

     அக்காலை -இவ்வாறுஅனுமான் எண்ணிக் கொண்டு நின்றபொழுது;
உலகம் ஒரு மூன்றையும் முக்கால் வென்று - மூன்று உலகங்களையும்
(ஒருமுறைக்கு) மூன்று முறையாக வென்று; முற்றி புக்கானின் முன்புக்கு -
எதிரில்லாமல் முடித்து இலங்கையில் வெற்றி வீரனாய்ப் புகுந்த இந்திரசித்துக்கு
முன்னே வந்து; அரக்கரும், யானையும் தேரும், மாவும் - அரக்கர்களாகிய
காலாட்படையும், யானை, தேர், குதிரை ஆகிய படைகளும்; உயர் பூசல்
பெருக்கும் வேலை -
மிக்க ஆரவாரத்தைப் பெரிதும் உண்டாக்கிய
வேளையில்; மிக்கானும் - பெரியோனான அனுமனும்; வெகுண்டு ஓர்
மராமரம் கொண்டு -
சினம் கொண்டு,
 ஒரு ஆச்சாமரத்தைப்பிடுங்கி
எடுத்துக் கொண்டு; மிக்கான் - (போர் செய்ய) பேருருக் கொண்டவனானான்.

     இந்திரசித்துபோர்க்களம் புகுதற்கு முன்பு, நால்வகைப் படைகளும்
வந்து ஆரவாரம் செய்தன. அதனைக் கண்டு அனுமனும் வெகுண்டு
போருக்குத் தயாரானான் என்க.                             (53)