5770.

உதையுண்டனயானை; உருண்டன யானை;
                             ஒன்றோ ?
மிதியுண்டனயானை; விழுந்தன யானை; மேல் மேல்,
புதையுண்டன யானை;புரண்டன யானை; போரால்
வதையுண்டன யானை;மறிந்தன யானை, மண்மேல்.

     யானை உதை உண்டன- (அரக்கர் சேனையில்) சில யானைகள்
அனுமனால் உதைக்கப் பெற்றன; யானை உருண்டன - சில யானைகள்
உருளப் பெற்றன; ஒன்றோ யானை மிதி உண்டன - இது மாத்திரமோ ?
சிலயானைகள் அனுமனால் மிதிக்கப்பட்டுப் போயின; யானை விழுந்தன -
சிலயானைகள் கீழே விழுந்தன; யானை மேல் மேல் புதை உண்டன - சில
யானைகள் ஒன்றன் மேல் ஒன்றாகப் புதைந்து போயின; யானை புரண்டன -
சில யானைகள் முன் பின்னாகவும் கீழ் மேலாகவும் நிலை மாறின; யானை
போரால் வதையுண்டன -
சில யானைகள் போரில் வதைக்கப்பட்டன;
யானை மண்மேல் மறிந்தன - மற்றும் சில யானைகள் அந்தப்
போர்க்களத்தில் மல்லாந்து வீழ்ந்தன.

     அனுமனால்யானைப்படை அழிந்தமை கூறப்பட்டது.          (54)