5778. | ஆண்டநாயகன் தூதனும், அயனுடை அண்டம் கீ்ண்டதாம் என,கிரி உக, நெடு நிலம் கிழிய, நீண்ட மாதிரம்வெடிபட, அவன் நெடுஞ் சிலையில் பூண்ட நாண் இற,தன் நெடுந் தோள் புடைத்து ஆர்த்தான். |
ஆண்ட நாயகன் -(எல்லாஉயிர்களையும்) அடிமை கொண்டருளும் (திருமாலின் அவதாரமாகிய) இராமபிரானின் தூதனும் - தூதனான அனுமனும்; அயனுடை அண்டம் கீண்டதாம் என - (அவ்வொலிக்கு எதிராக) பிரம்மாண்டமே பிளந்தது என்று சொல்லும்படியாகவும்; கிரி உக - மலைகள் பொடியாய்ச் சிந்தும்படியாகவும்; நெடும் நிலம் கிழிய - நீண்ட பூமி பிளக்கும் படியும்; நீண்ட மாதிரம் வெடிபட - நெடிய திசைகள் பிளவுபடவும்; அவன் நெடுஞ்சிலையில் பூண்ட நாண்இற - இந்திர சித்தினது நீண்ட வில்லில் பூட்டிய நாண் அற்றுப் போகவும்; தன் நெடுந்தோள் புடைத்து ஆர்த்தான் -தனது நெடிய தோள்களைக் கொட்டிக் கர்ச்சனை செய்தான். இந்திரசித்து,முன் எழுப்பிய ஒலிக்குக் கருவியாயிருந்த நாணும் அறும்படி இருந்தது, அனுமன் தோள் புடைத்து ஆர்த்த ஒலி என்பது கருத்து. (62) |