5786.

உற்றவாளிகள் உரத்து அடங்கின உக உதறா,
கொற்ற மாருதி, மற்றவன் தேர்மிசைக் குதித்து,
பற்றி வன்கையால், பறித்து எழுந்து, உலகு எலாம்
                                     பலகால்
முற்றி வென்றபோர் மூரி வெஞ் சிலையினை,
                                   முறித்தான்.

     கொற்றமாருதி - வெற்றியை உடைய அனுமன்; உற்ற உரத்து
அடங்கின வாளிகள் -
வந்து பட்டவையாய் மார்பில் பதிந்தவைகளான
(இந்திரசித்தின்) அம்புகள் அனைத்தும்; உக உதறா - கீழே சிந்தும்படி
உதறித் தள்ளிவிட்டு; அவன் தேர் மிசை குதித்து - இந்திரசித்துவின் தேரின்மேல் எழும்பிப் பாய்ந்து; உலகு எலாம் பல கால் முற்றி வென்ற
போர்மூரி வெம் சிலையினை - 
உலகும் யாவையும் பல முறை முழுவதும்
வென்றதான போரில் சிறந்த அவனது வலிய வில்லினை; வன் கையால் பற்றி
-
தனது வலிய கையினால் பிடித்து; பறித்து எழுந்து முறித்தான் -பிடுங்கிக்
கொண்டு வெளியே வந்து ஒடித்தெறித்துவிட்டான்.

      அனுமன் ஆற்றல்கூறப்பட்டது.                           (70)