5787. | முறிந்தவில்லி்ன் வல் ஓசை போய் முடிவதன்முன்னர், மறிந்து போரிடைவழிக் கொள்வான், வயிர வாட் படையால் செறிந்த வான்பெரு மலைகளைச் சிறகு அறச் செயிரா எறிந்தஇந்திரன் இட்ட, வான் சிலையினை எடுத்தான். |
முறிந்தவில்லின் வல் ஓசை போய் முடிவதன் முன்னர் - ஒடிபட்டஅந்த வில்லி்ன் வலிய ஓசை அடங்குவதற்கு முன்னே, (இந்திரசித்து); போரிடை மறிந்து வழிக் கொள்வான் - போரை மீண்டும் தொடர வேண்டி; வயிர வாள் படையால் - வச்சிராயுதம் என்னும் வாளால்; செறிந்த வான் பெரு மலைகளை - அடர்ந்த மிகப்பெரிய மலைகளை; சிறகு அற செயிரா எறிந்த இந்திரன் - இறகுகள் அற்றுப் போகும் படி சினங் கொண்டு துணித்தவனான தேவேந்திரன்; இட்ட வான்சிலையினை எடுத்தான் - திறையாகக் கொடுத்த பெரிய வில்லைக் கையில் எடுத்துக் கொண்டான். அந்த வில்ஒடிந்தவுடனே வேறு ஒரு வில்லை எடுத்துக் கொண்டான் இந்திரசித்து. அது, இந்திரன் தனது தோல்விக்குப் பிறகு, திறையாக இ்ந்திரசித்துக்குக் கொடுத்தது. (71) |