5806.

மைத் தடங்கண்ணியர், மைந்தர், யாவரும்,
பைத் தலை அரவுஎனக் கனன்று, 'பைதலை
இத்தனைபொழுதுகொண்டு இருப்பதோ ?' எனா,
மொய்த்தனர்;கொலை செய முயல்கின்றார், சிலர்.

     மை தடம்கண்ணியர் - மையிட்ட பெரியகண்களை
உடையவர்களானமகளிரும்; மைந்தர் - ஆடவரும்; யாவரும் - ஆகிய
எல்லோரும்;பைத்தலை அரவு என கனன்று - படத்தோடு கூடிய தலையை
உடையபாம்பு போலக் கோபம் கொண்டு; பைதலை - இந்தக் குரங்குப்
பயலை;இத்தனை பொழுது கொண்டு இருப்பதோ எனா - இவ்வளவு
நேரம்உயிருடன் வைத்துக் கொண்டு நாம் வாளா இருப்பதோ என்று கூறி;
மொய்த்தனர் -
அனுமனைச் சூழ்ந்து மொய்த்துக் கொண்டனர்; சிலர்
கொலை செய முயல்கின்றார் -
சில அரக்கர்கள், அனுமனைக் கொலை
செய்ய முயற்சி செய்வாராயினர்.

     கண்ணியர்மைந்தர் யாவரும் மொய்த்தனர்; சிலர் கொலை செய்ய
முயன்றனர் என்பதாம்.                                          (2)