5808.

'எந்தையை,எம்பியை, எம் முனோர்களைத்
தந்தனை போக'என, தடுக்கின்றார் பலர்;
'அந்தரத்துஅமரர்தம் ஆணையால், இவன்
வந்தது' என்று,உயிர்கொள மறுகினார் பலர்.

     பலர் - வேறு பலர்;எந்தையை எம்பியை - 'எமது தந்தையையும்,
எமது தம்பியையும்; எம்முன்னோர்களை - எமது தமையன்மார்களையும்;
தந்தனை போகு எனா -
மீளக் கொணர்ந்து கொடுத்துஅப்புறம் செல்' என்று
சொல்லி (அனுமனை); தடுக்கின்றார் - மறித்துக் கொள்பவரானார்கள்; பலர்
-
வேறு பலர்; இவன் அந்தரத்து அமரர்தம் ஆணையால் வந்தது என்று
-
இவன், வானில் உள்ள தேவர்களின் கட்டளையினால் இங்கு வந்ததாகும்
என்று மாறாக எண்ணி; உயிர் கொள மறுகினார் - அந்த அனுமன்
உயிரைப் பற்றிப் பறிக்கமுடியாது வருந்தினார்கள்.

     தேவர்கள்அரக்கர்களுக்குப் பகைவர்களாதலால், அவர்களது
ஆணையின் படி அனுமன் இலங்கைக்கு வந்திருக்கலாம் என்பது பல
அரக்கர்களது எண்ணம். மறுகுதல் - மனம் குழம்புதல்; இவனை எங்ஙனம்
கொல்வது என்று மனம் கலங்கினர் பலர்.                         (4)