5810.

கொண்டனர்எதிர் செலும் கொற்ற மா நகர்,
அண்டம் உற்றது,நெடிது ஆர்க்கும் ஆர்ப்புஅது-
கண்டம் உற்றுளஅருங் கணவர்க்கு ஏங்கிய
குண்டலமுகத்தியர்க்கு உவகை கூரவே.

     கொண்டனர் -அனுமனைப்பற்றி இழுத்துக் கொண்டு
செல்பவர்களுக்கு; எதிர் செலும் கொற்ற மாநகர் - எதிரே
 வேடிக்கை
பார்க்கவருகின்ற வெற்றியை உடைய இலங்கை நகரில் உள்ள அரக்கர்கள்;
நெடிது ஆர்க்கும் ஆர்ப்பு அது -
பெரிதாய் முழக்கும் ஆரவார ஒலி;
கண்டம் உற்று உள -
(அனுமனால் போரில்) கழுத்து அறுபட்டு
அழிவடைந்துள்ள; அரும் கணவர்க்கு ஏங்கிய குண்டல முகத்தியர்க்கு -
தமது அரிய கணவர்களுக்காக ஏக்கமுற்று வருந்திய, குண்டலம் விளங்கும்
முகத்தை உடைய அரக்கமகளிர்க்கு; உவகை கூர - மகிழ்ச்சி மேலோங்கிவர,;
அண்டம் உற்றது -
உலகம் முழுதும் பரவிற்று.

    தம்கணவன்மார்களைக் கொன்ற அனுமனைக் கட்டி இழுத்து வரும்
செய்தியைக் கண்ட அரக்கர்களது பேரொலியைக் கேட்டதனால், கணவர்களை
இழந்த மகளிர்கள் மகிழ்ந்தனர் என்க.                            (6)