5813. | ஆர்ப்பு உறஅஞ்சினர்; அடங்கினார் பலர்; போர்ப்புறச்செயலினைப் புகல்கின்றார் பலர்; பார்ப்புற,பார்ப்புற, பயத்தினால் பதைத்து, ஊர்ப் புறத்துஇரியலுற்று ஓடுவார், பலர். |
பலர், ஆர்ப்புஉற அஞ்சினர் அடங்கினார் - பல அரக்கர்கள், நகரில் ஆரவாரம் உண்டாக, (அதனைக் கேட்டு) பயந்தவர்களாய் அடங்கியிருந்தனர்; பலர் போர் புறச் செயலினை புகல்கின்றார் - வேறு பலஅரக்கர்கள், (அனுமான்) போரில் செய்த வீரச் செயல்களை எடுத்துக் கூறுவாராயினார்; பலர் பார்ப்புற பார்ப்புற - மற்றும் பல அரக்கர்கள், அனுமனைப் பார்க்கும் போதெல்லாம்; பயத்தினால் பதைத்து ஊர்ப் புறத்து இரியலுற்று ஓடுவார் - அச்சத்தால் நடுங்கி, ஊருக்கு வெளியே சிதறி ஓடுபவரானார்கள். அனுமனைக் கண்டஅரக்கர் பலரின் செயல்கள் கூறப்பட்டன. (9)
|