5817.

'திண்திறல் அரக்கர்தம் செருக்குச் சிந்துவான்,
தண்டல் இல் தன்உருக் கரந்த தன்மையான்,
மண்டு அமர்தொடங்கினன், வானரத்து உருக்
கொண்டனன்,அந்தக்கொல்?' என்றார் பலர்.

     அந்தகன் - (முன்புஇராவணனுக்குத் தோற்று ஓடிய) எமன்; திண்
திறல்அரக்கர் தம் செருக்கு சிந்துவான் -
மிக்க வலிமை உடைய
அரக்கர்களதுகருவத்தை அழிக்கும் பொருட்டு; தண்டல் இல் தன் உரு
கரந்ததன்மையான் -
அழிதல் இல்லாத தனது வடிவத்தை மறைத்துக்
கொண்டவனாய்; வானரத்து உரு கொண்டனன் - குரங்கு வடிவத்தை
எடுத்துக் கொண்டு; மண்டு அமர் தொடங்கினன் கொல் - மிக்க போரைத்
தொடங்கிச் செய்தனனோ ?; என்றார் பலர் - என்று கூறினார் பல
அரக்கர்கள்.

     அனுமன் யாவன்என்பதைப் பற்றி அரக்கர் தமக்குள்
ஆராய்ந்தமையைத் தெரிவித்தவாறு.                            (13)