5818.

அரமியத்தலம்தொறும், அம் பொன் மாளிகைத்
தரம் உறுநிலைதொறும், சாளரம்தொறும்,
முரசு எறிகடைதொறும், இரைத்து மொய்த்தனர்-
நிரை வளைமகளிரும், நிருத மைந்தரும்.

     நிரைவனைமகளிரும் - வரிசையான பலவளையல்களை அணிந்த
அரக்க மகளிரும்; அரமியம் தலம் தொறும் - மாளிகையின்மேல் உள்ள
நிலா முற்றங்களிலும்; அம் பொன் மாளிகை தரம் உறு நிலை தொறும் -
அழகிய பொன்மயமான வீடுகளின் மேல் நிலைகளிலும்; சாளரம் தொறும் -
பலகணிகளிலும்; முரசு எறிகடை தொறும் - பேரிகைகள் முழக்கும்

இடங்களிலும்;இரைத்து மொய்த்தனர் - முழக்கமிட்டுக் கொண்டு கூடி
நெருங்கியிருந்தனர்.

     வீதியில் இடம்இல்லாமையைத் தெரிவிக்கின்றது.              (14)