5820. | அரம்பையர், விஞ்சை நாட்டு அளக வல்லியர், நரம்பினும் இனியசொல் நாக நாடியர், கரும்பு இயல்சித்தியர், இயக்கர் கன்னியர், வரம்பு அறுசும்மையர், தலைமயங்கினார். |
அரம்பையர் -தேவமகளிர்; விஞ்சை நாட்டு அளகவல்லியர் - வித்தியாதர நாட்டுக் கூந்தலை உடைய கொடி போன்ற பெண்கள்; நரம்பினும் இனிய சொல் நாக நாடியர் - யாழ் நரம்பின் இசையை விட இனிய சொற்களை உடைய நாகலோகத்துக் கன்னியர்; கரும்பு இயல் சித்தியர் - (தம்மை நுகர்வார்க்கு) கரும்பு போன்ற சுவையை நல்கும் சித்த கணப்பெண்கள்; இயக்கர் கன்னியர் - யட்சகுலமகளிர்; வரம்பு அறு சும்மையர் - அளவற்ற இரைச்சலுடையவர்களாய்; தலை மயங்கினார் - எல்லா இடங்களிலும் வந்து கூடினார்கள். இவர்கள்,இராவணனால் அபகரிக்கப்பெற்று இலங்கையில் கொண்டு வந்து வைத்திருந்த அவனுடைய காதல் மகளிர்கள். சும்மை - ஒலி. 'இழுமென் சும்மை' - (பொருந. 65) |