5822.

அரக்கரும்அரக்கியர் குழாமும் அல்லவர்
கரக்கிலர், நெடுமழைக் கண்ணின் நீர்; அது,

விரைக் குழல்சீதைதன் மெலிவு நோக்கியோ ?
இரக்கமோ ?அறத்தினது எளிமை எண்ணியோ ?

     அரக்கரும்அரக்கியர் குழாமும் அல்லவர் - அரக்க ஆடவர்
மகளிர்களுடைய கூட்டம் அல்லாதவர்களான தேவர் முதலிய அரம்பையர்கள்;
நெடு மழை கண்ணின் நீர் கரக்கிலர் -
நெடிய மழை போலும், (பெருகிய
தம்) கண்ணீரை மறைக்காதவர் களாயினர்; அது - அவ்வாறு கண்ணீர்
பெருகிய செயல்; விரை குழல் சீதை தன் மெலிவு நோக்கியோ ? -
நறுமணமுள்ள கூந்தலை உடைய சீதா பிராட்டியின் துன்பத்தைக் கருதியோ ?;
இரக்கமோ ? - அனுமனுக்கு உண்டான துன்பத்தால் ஏற்பட்ட இரக்கத்தாலோ
?; அறத்தினது எளிமை எண்ணியோ ? - தருமத்தினது, எளிமையைக்
கருதியதனாலோ (நேர்ந்தது).

     அரக்கர்யாவரும், அச்சம், வெறுப்பு சினம் ஆகியவை கொண்டிருக்க,
தேவர் முதலியோர் இரக்கமும் துன்பமும் கொண்டிருந்தனர் என்று
கூறப்பட்டது.                                             (18)