5825. | 'வளை எயிற்று அரக்கனை உற்று, மந்திரத்து அளவுறு முதியரும்அறிய ஆணையால் விளைவினைவிளம்பினால், மிதிலை நாடியை, இளகினன்,என்வயின் ஈதல் ஏயுமால்; |
வளை எயிற்றுஅரக்கனை உற்று - வளைந்த பற்களை உடைய அரக்கனாகிய இராவணனை அடைந்து; மந்திரத்து அளவுறு முதியரும் அறிய - ஆலோசனைச் சபைக்கு உரியராக அளந்து குறிப்பிடப்பட்ட முதியோர்களும் அறியும்படி; ஆணையால் விளைவினை விளம்பினால் - இராமபிரான் கட்டளைப் படி, மேல் நிகழக்கூடிய செயல்களை நான் எடுத்துக் கூறினால்; இளகினன் - (இராவணன்) மனவுறுதி குலைந்து நெகிழ்ந்து; மிதிலை நாடியை என் வயின் ஈதல் ஏயும் - மிதிலை நாட்டவளான சீதையை என்னிடம் கொடுத்து விடக்கூடும். சிந்தைச்சீர்மையால் விளையக் கூடிய முதற் பயன் இது. சீதையைச் சிறை வீடு செய்தல். ஆல் - ஈற்றசை. (21) |