5827.

'வாலிதன்இறுதியும், மரத்துக்கு உற்றதும்,
கூல வெஞ்சேனையின் குணிப்பு இலாமையும்,
மேலவன் காதலன்வலியும், மெய்ம்மையான்,
நீல் நிறத்துஇராவணன் நெஞ்சில் நிற்குமால்.

     வாலிதன்இறுதியும் - வாலியின் அழிவும்;மரத்துக்கு உற்றதும் -
மராமரத்துக்கு நேர்ந்த அபாயமும்; வெம்கூல சேனையின் குணிப்பு
இலாமையும் -
கொடிய குரங்குப் படையின் அளவற்ற தன்மையும்; மேலவன்
காதலன் வலியும் -
சூரிய குமாரனான சுக்கிரீவனுடைய வலிமையும்; நீல்
நிறத்து இராவணன் நெஞ்சில் -
(நான் சென்று சொல்வதால்) நீல நிறத்தை
உடைய இராவணனது மனத்தில்; மெய்ம்மையால் நிற்கும் - உள்ளபடி
பதியும்.

     சிந்தைச்சீர்மையின் மூன்றாவது பயன்; இராவணன் மனத்தில், வாலியின்
மரணம் முதலியன பதிதல் ஆகும்.                                (23)