அனுமனுக்கு உற்றதைத்திரிசடை சொல்ல, சீதை புலம்புதல் 5834. | 'இறுத்தனன்கடி பொழில், எண்ணிலோர் பட ஒறுத்தனன்' என்றுகொண்டு உவக்கின்றாள், உயிர் வெறுத்தனள்சோர்வுற, வீரற்கு உற்றதை, கறுத்தல் இல்சிந்தையாள் கவன்று கூறினாள். |
கடிபொழில்இறுத்தனன் - மணம் மிக்கஅசோகவனத்தை ஒடித்தழித்தான்; எண் இலோர் பட ஒறுத்தனன் - அளவிறந்த அரக்கர்கள் அழியுமாறு கொன்றிட்டான்; என்று கொண்டு -என்றுஅவ்வப்போது சொல்லக் கேட்டுணர்ந்து;உவக்கின்றாள் - மகிழ்கின்றவளான சீதாபிராட்டிக்கு; கறுத்தல் இல்சிந்தையாள் - களங்கமில்லாத மனத்தை உடையவளான திரிசடை என்பவள்;வீரற்கு உற்றதை - மகாவீரனான அனுமனுக்கு ஏற்பட்ட துன்ப நிலையை;உயிர் வெறுத்தனள் சோர்வுற - தன் உயிரை வைத்துக் கொண்டு வாழ்வதில்வெறுப்புற்றவளாய், தளர்ச்சி அடையும்படி; கவன்று கூறினாள் -மனக்கவலையுடன் சொன்னாள். அனுமன் செய்தஆற்றல் மிக்க செயல்களையும், அவனுக்கு நேர்ந்த துன்ப நிலைமையையும் திரிசடை. சீதைக்கு அவ்வப் போது கூறுகின்றாள் என்று உணரலாம். (30) |