5848.

வண்மைக்கும், திரு மறைகட்கும், வானினும் பெரிய
திண்மைக்கும்,தனி உறையுளாம் முழு முகம்,
                                 திசையில்
கண்வைக்கும்தொறும், களிற்றொடு மாதிரம்
                                 காக்கும்
எண்மர்க்கும்மற்றை இருவர்க்கும் பெரும் பயம்
                                 இயற்ற.

     வண்மைக்கும் -(குபேரசம்பத்தை வென்று பெற்றுள்ள)
வளப்பத்துக்கும்; திருமறைகட்கும் - சிறந்த வேதங்கட்கும்; வானினும் பெரியதிண்மைக்கும் - ஆகாயத்தினும் பெரிய வலிமைக்கும்; தனி
உறையுளான் -
ஒப்பற்ற இருப்பிடமாய் உள்ள இராவணன்; முழுமுகம்
திசையில்கண்வைக்கும் தொறும் -
தனது
 பெரிய முகங்கள்பத்தையும் ஒரு
மிக்க வைத்து, எல்லாத்திக்குகளிலும் நோக்கும் போதெல்லாம்; களிற்றொடு
மாதிரம் காக்கும் எண்மர்க்கும் -
யானைகளோடு அந்த அந்தத்
திக்குகளைக் காக்கும் எண் திசைக்காவலர்கட்கும்; மற்றை இருவர்க்கும் -
மற்றவையான மேலும் கீழும் இருந்து பாதுகாக்கின்ற (துருவன் ஆதிசேடன்
என்னும்) இருவர்க்கும்; பெரும் பயம் எய்த - மிக்க அச்சம் தோன்றவும்.

     இராவணன்பார்வைக்கு, எட்டுத்திக்குப் பாலகர்களும் ? வானைப்
பாதுகாக்கும் துருவனும், நிலத்தைப் பாதுகாக்கும் ஆதிசேடனும் பயந்து
கிடந்தனர் என்பது கருத்து.                                  (44)