இராவணனைக்கண்ணுற்ற மாருதியின் மனநிலை 

5859.

இருந்த எண்திசைக் கிழவனை, மாருதி எதிர்ந்தான்;
கருந் திண்நாகத்தை நோக்கிய கலுழனின்
                                 கனன்றான்;
    
'திருந்துதோளிடை வீக்கிய பாசத்தைச் சிந்தி,
உருந்து நஞ்சுபோல்பவன்வயின் பாய்வென்' என்று
                                 உடன்றான்.

     இருந்த எண்திசைக் கிழவனை - இவ்வாறு வீற்றிருந்தஎட்டுத்
திக்குகளுக்கும் தலைவனான இராவணனை; மாருதி எதிர்ந்தான் - அனுமன்
தன் எதிரே கண்டான்; கருந்திண் நாகத்தை நோக்கிய கலுழனின் -
(கண்டதும்) கரிய வலிய பாம்பைக் கண்ட கருடன் போல; கனன்றான்
'திருந்து தோளிடை வீக்கிய பாசத்தைச் சிந்தி -
மனம் கொதித்தவனாய்,
'சிறந்து விளங்கும் என்னுடைய தோள்களில் கட்டியிருக்கிற பிரமாத்திரத்தைச்
சிதறடித்து; உருந்து  நஞ்சு போல்பவன் வயின் பாய்வென் என்று
உடன்றான் -
கோபித்து, விடம் போன்றவனான இந்த இராவணன் மேல்
இப்போது பாய்கின்றேன்' என்று உக்கிரங் கொண்டான்.

     இராவணனைக்கண்டதும், அனுமன் எண்ணிய எண்ணம் கூறப்பட்டது.
உருத்து - உருந்து; எதுகை நோக்கி மெலிந்தது. இராவணனுக்குக் கருநாகமும்,
அனுமனுக்குக் கருடனும் உவமைகள்.                            (55)