5862.

' "மாடு இருந்த மற்று இவன் புணர் மங்கையர்
                                  மயங்கி
ஊடு இரிந்திட,முடித் தலை திசைதொறும் உருட்டி,
ஆடல்கொண்டுநின்று ஆர்க்கின்றது; அது கொடிது
                                  அம்மா !
தேடி வந்தது, ஓர்குரங்கு" எனும் வாசகம்
                                  சிறிதோ ?+

     தேடி வந்தது ஓர்குரங்கு - சீதையைத் தேடிக்கொண்டு வந்ததாகிய
ஒரு குரங்கு; மாடு இருந்த இவன் புணர் மங்கையர் - இவ்விராவணன்
அருகில் இருப்பவர்களும், இவன் சேரத்தக்கவர்களுமான மகளிர்கள்; மயங்கி
ஊடு -
திகைத்து உள்ளே ஓடிப்போம்படி; முடித்தலை திசை தொறும்
உருட்டி -
கிரீடம் அணிந்த இவனது தலைகளைப் பலதிக்குகளிலும் உருளச்
செய்து; ஆடல் கொண்டு நின்று - வெற்றி கொண்டு (தான் சிறிதும்
அழிவுறாது) நிலை பெற்று நின்று; ஆர்க்கின்றது - ஆரவாரஞ் செய்கின்றது;
அது அம்மா கொடிது - அந்தக் குரங்கு அந்தோ ! மிகவும் கொடியது';
எனும் வாசகம் - என்று எல்லோரும் சொல்லும் புகழ் வார்த்தையைப்
பெறுதல்; சிறிதோ ? - சிறியதாகுமோ ? (அன்று மிகப் பெரிது என்றபடி).

     'நான் நினைக்கிறபடி செய்து முடிப்பேனானால், என்னை உலகத்தார்
புகழ்வர். அதுவே எனக்குப் பெருமை தருவதாகும்' எனக் கருதினான்
அனுமன் என்பதாகும்.                                      (58)