5877.

'யாரை நீ? என்னை, இங்கு எய்து காரணம்?
ஆர் உனைவிடுத்தவர் அறிய, ஆணையால்
சோர்விலைசொல்லுதி' என்னச் சொல்லினான்-
வேரொடும்அமரர்தம் புகழ் விழுங்கினான்.

     அமரர் தம் புகழ்வேரொடும் விழுங்கினான் - தேவர் புகழை
அடியோடு உண்டவனான இராவணன்; நீ யாரை - நீ யார்?; இங்கு எய்து
காரணம் -
இங்கு வந்த காரியம்; என்னை - யாது?; உனைவிடுத்தவர் ஆர்
? -
உன்னை அனுப்பியவர் யாவர் ?; அறிய - நான் தெரிந்து கொள்ளுமாறு;
ஆணையால் -
என் கட்டளையின் படி; சோர்வு இலை சொல்லுதி என்ன
சொல்லினான் -
தவறில்லாமல் உள்ளபடி சொல்லுவாய் என்று (அனுமனை
நோக்கிக்) கூறினான்.

     விழுங்கினான் என்பது அழித்தான் என்ற பொருளில் வந்த மரபு
வழுவமைதி. சோர்விலை; 'பாசம் பிணிப்பால் உண்டான தளர்ச்சியின்றி'
என்றும் பொருள் கூறலாம்.                                  (73)