5879. | 'அனையவன் யார் ? என, அறிதியாதியேல், முனைவரும்,அமரரும், மூவர் தேவரும், எனையவர்எனையவர் யாவர், யாவையும், நினைவு அரும் இருவினை முடிக்க, நின்றுளோன்; |
அனையவன் யார்என - அந்த வில் வீரன் யாவன் என்று; அறிதி ஆதியேல் - (விவரம்) அறிய வேண்டுவாயானால்; முனைவரும் - முனிவர்களும்; அமரரும் - தேவர்களும்; மூவர் தேவரும் - கடவுளர்களாகிய மும்மூர்த்திகளும்; எனையவர் எனையவர் யாவர் - இனவகை யாலும் மேம்பாட்டாலும் எத்தனை பேர்கள் உண்டோ அவர்களும்; யாவையும் - அவர்கள் ஒழிந்த அஃறிணைப் பொருள்களாயுள்ளவைகளும்; நினைவு அரும் இருவினை முடிக்க நின்றுளோன் - நினைத்தற்கும் அரியதான பெரியகாரியத்தை நிறைவேற்றுவதற்கு, அவதரித்து நிலை பெற்றுள்ளவன். இரு வினை என்றதுஇராவண வதத்தை. (75) |