5884.

'மூலமும் நடுவும் ஈறும் இல்லது ஓர் மும்மைத்து ஆய
காலமும்,கணக்கும், நீத்த காரணன்-கை வில்
                                  ஏந்தி,
சூலமும்திகிரி சங்கும் கரகமும் துறந்து, தொல்லை
ஆலமும் மலரும்வெள்ளி்ப்பொருப்பும் விட்டு,-
                         அயோத்தி வந்தான்;

     மூலமும் நடுவும்ஈறும் இல்லது - முதலும் நடுவும் முடிவும்
இல்லாததுஎன ; ஓர் மும்மைத்து ஆய காலமும் - இறப்பு, நிகழ்வு, எதிர்வு
எனஇலக்கண முறையால் வகுத்துக் கூறப்படும் மூன்று காலங்களையும்;
கணக்கும்-
இவ்வளவினது என்று கணித நூலால் கூறப்படும்
எண்ணிக்கையையும்; நீத்தகாரணன் - கடந்து நின்ற (எல்லாப்
பொருள்களுக்கும்) காரணனாய அந்தமுழுமுதல் பொருள்தான்; சூலமும்
திகிரி சங்கும் கரகமும் துறந்து -
சூலத்தையும், சக்கரம் சங்கு
ஆகியவற்றையும், கமண்டலத்தையும் (தன்கையில்கொள்ளாது) விட்டு; கை
வில் ஏந்தி -
கையில் வில்லை ஏந்திக் கொண்டு;தொல்லை ஆலமும்
மலரும் வெள்ளிப் பொருப்பும் விட்டு -
பழமையாகத்தனக்கு உரிய
இடங்களாகிற ஆலிலையையும் தாமரை மலரையும் கைலாயமலையையும்
இடமாகக் கொள்ளாது விட்டு,; அயோத்தி வந்தான் -அயோத்தி மாநகரில்
இராமபிரானாக அவதரித்தான்.

     காலம்நித்தியமானது என்பதை உணர்த்துகின்றது 'மூலமும் நடுவும் ஈறும்
இல்லது' என்ற தொடர். கணக்கு- கணித நூலார் கூறும் எண்ணிக்கை அளவு.
மும்மைத்தாயகாலம் - இலக்கண நூலார் கூறும் இறப்பு நிகழ்வு எதிர்வு
என்றகால அளவு. இவை எல்லாவற்றையும் கடந்து நிற்பவன் கடவுள். அவனே
காரணன் ஆவான்.                                          (80)