சுக்கிரீவன்முதலியோரை இராவணன் இகழ்ந்து பேசுதல் 5892. | 'உம் குலத்தலைவன், தன்னோடு ஒப்பு இலா உயர்ச்சியோனை வெங் கொலைஅம்பின் கொன்றார்க்கு ஆள்-தொழில் மேற்கொண்டீரேல், எங்குஉலப்புறும் நும் சீர்த்தி் ? நும்மொடும் இயைந்தது என்றால், மங்குலின்பொலிந்த ஞாலம் மாதுமை உடைத்து மாதோ ! |
உம் குலத்தலைவன் தன்னோடு ஒப்பு இலா உயர்ச்சி யோனை - உங்கள்வானரக் குலத்தலைவனாக இருத்தலோடு ஒப்பற்ற மேன்மை உடையவனுமான வாலியை; வெம் கொலை அம்பின் கொன்றாற்கு - கொடிய கொலை செய்யும் அம்பினால் கொன்ற இராமனுக்கு; ஆள் தொழில் மேற் கொண்டீரேல் - அடிமையாதல் தொழிலையும் ஏற்றுக் கொண்டீர்களானால்; எங்கு உலப்புறும் நும் சீர்த்தி - உங்கள் புகழ் எங்கே சென்று முடிவதோ?; நும்மொடும் இயைந்தது என்றால் - அப்புகழ் உங்களோடு இயைவதே என்று உலகம் கூறுமானால்; மங்குலின் பொலீந்த ஞாலம் மாதுமை உடைத்து - மேகத்தினால் வளம்பெற்று விளங்குகின்ற இந்தஉலகம் பெண் தம்மை உடையதேயாம். தன் அரசனைக்கொன்றவனுக்கு ஆட்பட்டிருத்தல் இழிவுடையோர் செயல் என்பதை எதிர் மறைப் பொருளில் வஞ்சப்புகழ்ச்சியாக இராவணன் நிந்தித்தான் என்க. மாதுமை - மாதரின் தன்மை; பெண்தன்மை. (88) |