5896.

' "வறிது வீழ்த்தனை வாழ்க்கையை; மன் அறம்
சிறிதும்நோக்கலை; தீமை திருத்தினாய்;
இறுதி உற்றுளது;ஆயினும், இன்னும் ஓர்
உறுதி கேட்டி;உயிர் நெடிது ஓம்புவாய் !

     வாழ்க்கையைவறிது வீழ்த்தனை - உனது செல்வவாழ்வைவீணே
கெடுத்துக் கொண்டாய்; மன் அறம் சிறிதும் நோக்கலை - அழியாது நிற்கும்
அற நெறியை சிறிதும் நோக்கினாயல்லை; தீமை திருத்தினாய் - பாவச்
செயல்களை வளர்த்துவிட்டனை; இறுதி உற்றுளது ஆயினும் - உனக்கு
அழிவு நெருங்கி உள்ளது; ஆனாலும்; இன்னும் - இந்த நிலையிலும்; ஓர்
உறுதி கேட்டி -
யான் கூறும் நன்மைதரத்தக்கதைக் கேட்பாயாக; உயிர்
நெடிது ஓம்புவாய் -
(கேட்டு அதன்படி நடப்பாயானால்) உயிரை
நெடுங்காலம் பாதுகாத்துக் கொள்வாய்.                          (92)