5898. | ' "இன்றுவீந்தது; நாளை, சிறிது இறை நின்று வீந்தது;அலால், நிறை நிற்குமோ ? ஒன்று வீந்தது,நல் உணர் உம்பரை வென்று வீங்கியவீக்கம், மிகுத்ததால். |
நல் உணர்உம்பரை - நல்ல அறிவுடைய தேவரை;வென்று வீங்கிய வீக்கம் மிகுத்ததால் - வெற்றி கொண்டு, அதனால் எழுந்த பூரிப்பு (செருக்கு) எல்லை மீறியதால்; ஒன்று வீந்தது - ஒப்பற்றதாகிய வாழ்வின் பெருமை (உங்களை விட்டு முன்னரே) நீங்கிவிட்டது; இறை இன்று வீந்தது - எஞ்சியுள்ள உங்கள் பெருமை இன்றைய நாளிலேயே (பெரும் பான்மையும்) அழிந்து போய்விட்டது; சிறிது - மற்றை எஞ்சியுள்ள சிறுபான்மையும்; நின்று நாளை - இன்றைக்கு நின்று நாளை; வீழ்வது அலால் - அழிவதேயாகுமல்லாமல்; நிறை நிற்குமோ ? - அழிவின்றி நிலைத்து நிற்குமோ ? (நில்லாது என்றபடி); 'இன்று இறந்தனநாளை இறந்தன' என்று, இராவணன் பிராட்டியைப் பார்த்துக் கூறியதை நினைவூட்டுகின்றது முதல் அடி. வீக்கம் - செல்வம்' என்பது பழைய உரை. (94) |