5908.

' "ஈறு இல் நாண் உக, எஞ்சல் இல் நல் திரு
நூறி, நொய்தினைஆகி, நுழைதியோ ?-
வேறும், இன்னும்நகை ஆம் வினைத் தொழில்
தேறினார் பலர்காமிக்கும் செவ்வியோய் !

     இன்னும் நகை ஆம்- (மற்றும்) பிறர் சிரித்தற்கு; வினைத் தொழில்
-
இடமான பல தொழில்களை; தேறினார்  பலர் - செய்தலில் தேறியவர்;
காமிக்கும் செவ்வியோய் - பலராலும் விரும்பப்படும் சமயத்தை
உடையவனே !; ஈறு இல் நாண் உக - அழிவின்றிக் காக்கத்தக்க நாணம்
கெடும்படி; எஞ்சல் இல் நல் திரு நூறி - குறைவற்ற (உனது) அரச
செல்வத்தையும் அழித்துக் கொண்டு; நொய்தினை ஆகி வேறும்
நுழைதியோ -
சிறுமைக்குணம் உள்ளவனாய் (நீதி வழிக்கு) வேறுபட்ட
இடுக்கு வழியான தீய நெறியில் செல்வையோ ?

     தீயதொழிலில்தேறியவர்க்கு, காட்சிக்கு எளியவன் இராவணன்
என்பதும், அவன் பிறன்மனை விழைதலாகிய தீய இடுக்கு வழியில் செல்லும்
சிறுமைக் குணத்தினன் என்பதும் உணர்த்தப்பட்டது.               (104)