அறுசீர் ஆசிரியவிருத்தம்

5916.

'அந்தணன்,உலகம் மூன்றும் ஆதியின் அறத்தின்
                           ஆற்றல்
தந்தவன்,அன்புக்கு ஆன்ற தவ நெறி உணர்ந்து,
                           தக்கோய் !
இந்திரன் கருமம்ஆற்றும் இறைவன் நீ; "இயம்புதூது
வந்தனென்" என்றபின்னும், கோறியோ, மறைகள்
                           வல்லோய் ?

     தக்கோய் ! -(அறிவு ஆற்றல்களில்) தகுதி உடையவனே !; மறைகள்
வல்லோய் ! -
வேதங்களில் வல்லவனே ! ஆதியின் உலகம் மூன்றும்
அறத்தின்  தந்தவன் அந்தணன் அன்புக்கு ஆன்ற தவநெறி உணர்ந்து
-
ஆதி காலத்தில் மூவகை உலகங்களையும் தருமத்தின் பலங் கொண்டு
படைத்தவனான பிரமனது அன்புக்கு அமைந்த தவவழியை அறிந்து, (செய்து
முடித்து வரம் பெற்று); இந்திரன் கருமம் ஆற்றும் இறைவன் நீ -
தேவேந்திரனது திரிலோக ஆட்சியைக் கைப்பற்றி ஆளவல்ல பேரரசன் நீ
(அப்படியிருந்தும்); இயம்பு தூது வந்தனென் என்ற பின்னும் கோறியோ -
'ஒருவன் கூறியதைச் சொல்லும் தூதனாக இங்கு வந்தேன்' என்று சொன்ன
பிறகும் (அவனைக்) கொல்லுகின்றாயோ ?

     இராவணனதுபெருமையை எடுத்துக் காட்டி, 'தூதுவனைக் கொல்வது
தக்கதன்று' என்று வீடணன் கூறினான் என்க.                     (112)