5917.

'பூதலப் பரப்பின், அண்டப் பொகுட்டினுள், புறத்துள்,
                               பொய் தீர்
வேதம் உற்றுஇயங்கு வைப்பின், வேறு வேறு
                           இடத்து வேந்தர்,
மாதரைக் கொலைசெய்தார்கள் உளர் என வரினும்,
                           வந்த
தூதரைக்கொன்றுளார்கள் யாவரே, தொல்லை
                           நல்லோர் ?

     பூதலப் பரப்பின்- இப்பூமிப் பரப்பிடத்தும்; அண்டப்
பொகுட்டினுள்-
அண்ட கோளத்தின் உள்ளிடத்தும்,; புறத்துள் -
உள்ளிடத்தும், அதன்புறமாகிய பகிரண்டத்திடத்தும்; பொய் தீர் வேதம்
உற்று இயங்கு வைப்பின்-
பொய்ம்மையில்லாத
 (சத்தியமான)
வேதநெறிபொருந்தி வழங்கிவரும் உலகங்களில்; வேறு வேறு இடத்து
வேந்தர் -
வெவ்வேறு இடங்களில் உள்ள அரசர்களில்; மாதரைக் கொலை
செய்தார்கள் உளர் எனவரினும் -
மகளிரைக் கொலை செய்தவர்கள்
உள்ளார் என்று சொல்லப்படுமானாலும்; தொல்லை நல்லோர் - பழமையான
நீதிமான்கள்; வந்த தூதரைக் கொன்று உளார்கள் யாவர் - தம்மிடத்தில்
பிறர் அனுப்ப வந்த தூதரைக் கொன்றுள்ளவர் யாரே உள்ளார் ? (ஒருவரும்
இல்லை என்பதாம்);

     பாவங்களுள் பெண்கொலை கொடிது; அதனினும் கொடிது தூதுவனைக்
கொல்லுதல் என்பதாம்.                                        (113)