5920.

'இளையவள் தன்னைக் கொல்லாது, இரு செவி
                          மூக்கொடு ஈர்ந்து,
"விளைவு உரை"என்று விட்டார், வீரர் ஆய்;
                         மெய்ம்மை ஓர்வார்;
களைதியேல் ஆவி,நம்பால் இவன் வந்து கண்ணின்
                          கண்ட
அளவு உரையாமல்செய்தி ஆதி' என்று, அமையச்
                         சொன்னான்.

     வீரர் ஆய்மெய்ம்மை ஓர்வார் - சுத்த வீரர்களாய்உண்மை நீதியை
உணர்ந்த இராம இலக்குவர்கள்; இளையவள் தன்னைக் கொல்லாது -
(தம்மிடம் வந்து தகாத முறையில் நடந்த) நம் தங்கை சூர்ப்பனகையைக்
கொல்லாமல்; இரு செவி மூக்கொடு ஈர்ந்து விளைவு உரை என்று
விட்டார் -
இரண்டு காதுகளையும் மூக்கையும் அறுத்து,'இவ்விடத்துச்
செய்தியை (உன்தமையனிடம் சென்று) சொல்' என்று உயிரோடு அனுப்பி
விட்டார்கள்; ஆவிகளை தியேல் - (அவ்வாறிருக்க) நீ இந்தத் தூதனுடைய
உயிரைப் போக்குவாயானால்; நம்பால் இவன் வந்து கண்ணில் கண்ட
அளவு உரையாமல் செய்தி ஆதி -
நம்மிடத்தில் 'இவன் வந்து, தனது
கண்ணால் கண்ட செய்தி அளவை (அவர்களிடம் சென்று அவர்களுக்கு)
உரையாதபடி செய்தனை ஆவார்'; என்று அமைய சொன்னான் - என்று
(இராவணன் மனதில்) பதியும் வண்ணம் (வீடணன்) கூறினான்.

     அனுமனைக்கொல்லாது விடுவதற்கு, சூர்ப்பணகை கொல்லப்படாமல்
விடப்பட்டதை எடுத்துக்காட்டாகக் கூறி, வீடணன் தனது நீதி உரையை
அமைய (பொருந்த) முடித்தான் என்க.                          (116)