5929.

'அந்தநகரும் கடி காவும் அழிவித்து, அக்கன்
                              முதலாயோர்
சிந்த நூறி,சீதையொடும் பேசி, மனிதர் திறம் செப்ப
வந்த குரங்கிற்குஉற்றதனை, வம்மின், காண வம்'
                              என்று,
தம்தம் தெருவும்,வாயில்தொறும், யாரும் அறியச்
                              சாற்றினார்.

     அந்த நகரும்கடிகாவும் அழிவித்து - (இராவணனின்ஏவலர்கள்)
இலங்கை நகரையும் காவல் மிகுந்த அசோகவனம் என்னும் சோலையையும்
அழியச் செய்தும்; அக்கன் முதலாயோர்
சிந்த நூறி - அக்ககுமாரன்முதலிய
சிறந்த அரக்கர்களை சிதறி அழியக் கொன்றும்; சீதையொடும் பேசி மனிதர்
திறம் செப்ப வந்த -
சீதையுடன் தனியே பேசியும், அற்ப மனிதர்களது
வலிமையைச் சொல்லவும் இராவணனிடத்து வந்த; குரங்கிற்கு உற்றதனை -
இந்தக் குரங்குக்கு நேர்ந்த துன்ப நிலையை; காண வம்மின் வம் என்று -
பார்ப்பதற்கு வாருங்கள் வாருங்கள் என்று; தம் தம் தெருவும் வாயில்
தொறும் -
தத்தம் வீதிகளிலும்வீட்டு வாயில்கள் எல்லாவற்றிலும்; யாரும்
அறிய சாற்றினார் -
அனைவரும்அறியும்படிக் கூறினார்கள்.

      இராவணனுடையஏவலர்கள், குரங்குக்கு ஏற்பட்டுள்ள துன்ப நிலையைக்
காண வருமாறு அனைவரையும்அழைத்தனர் என்க.                (125)