5935.

வெற்பினால் இயன்றது அன்ன மேனியை விழுங்கி,
                           வெந் தீ
நிற்பினும் சுடாதுநின்ற நீர்மையை நினைவின் 
                           நோக்கி,
அற்பின் நார் அறாத சிந்தை அனுமனும், 'சனகன்
                            பாவை
கற்பினால்இயன்றது' என்பான், பெரியது ஓர்
                            களிப்பன் ஆனான்.

     அற்பின் நார்அறாத சிந்தை அனுமனும் - (சீதாராமர்கள்பக்கல்)
தான் கொண்டுள்ள பக்தியாகிய பற்று நீங்காத மனத்தை உடைய அனுமனும்;
வெம் தீ -
அந்தக் கொடிய நெருப்பு; வெற்பினால் இயன்றது அன்ன
மேனியை விழுங்கி நிற்பினும் -
மலையால் அமைக்கப்பட்டது போன்ற
தனது உடலை முழுவதும் கவர்ந்து நின்று எரித்தாலும்; சுடாது நின்ற
நீர்மையை நினைவின் நோக்கி -
தன்னைச் சுடாது குளிர்ச்சியோடு
விளங்கிய தன்மையை தன் மனத்தால் நன்கு ஆராய்ந்து உணர்ந்து; சனகன்
பாவை கற்பினால் இயன்றது -
'சனகனின் மகளாகிய சானகியின் கற்பின்
சிறப்பால் ஆனது (இது)'; என்பான் - என்று தீர்மானித்தவனாகி; பெரியது
ஓர் களிப்பன் ஆனான் -
ஒப்பற்ற பெருங்களிப்பை உடையவன் ஆனான்.

     நெருப்பு தன்னைச்சுடாமல் இருப்பதற்குக் காரணம் பிராட்டியின் கற்புச்
சிறப்பே என்று உணர்ந்து அனுமன் மகிழ்ந்தனன் என்க.             (131)