விசும்பில்பொலிந்த அனுமன் தோற்றம் 

5938.

இற்ற வாள்அரக்கர் நூறாயிரவரும், இழந்த
                          தோளார்,
முற்றினார் உலந்தார்; ஐயன் மொய்ம்பினோடு
                          உடலை மூழ்கச்
சுற்றிய கயிற்றினோடும் தோன்றுவான், அரவின்
                           சுற்றம்
பற்றிய கலுழன்என்ன, பொலிந்தனன் விசும்பின்
                           பாலான்.

     இற்றவாள்அரக்கர் நூறு ஆயிரவரும் - தனிப்பட்டு விழுந்த
கொடியஅந்த அரக்கர் நூறாயிரம் பேரும்; இழந்த தோளார் முற்றினார்
உலந்தார் -
தோள்களை இழந்தவர்களாய் உயிர் முடிந்து இறந்தார்கள்; ஐயன்
-
அனுமன்;மொய்ம்பினோடு உடலை மூழ்கச் சுற்றிய கயிற்றினோடும் -
தோள்களோடுஉடம்பையும் அழுந்தக் கட்டிய கயிற்றினுடனே; விசும்பின்
பாலான்தோன்றுவான்-
ஆகாயத்திடத்துக் காணப்படுபவனாய்; அரவின்
சுற்றம்பற்றிய கலுழன் என்ன பொலிந்தனன் -
பாம்பின் கூட்டம் பற்றிய
கருடனைப் போல விளங்கினான்.

     கயிறுகளால்கட்டுண்டு வானில் விளங்கிய அனுமனுக்கு, அரவுகளால்
சுற்றப்பட்டு வானில் பறக்கும் கருடன் உவமை. மொய்ம்பு - தோள். 'பூந்தாது
மொய்ம் பினவாக' (கலித் தொகை 88:2)                        (134)