5946.

வானகத்தைநெடும் புகை மாய்த்தலால்,
போன திக்குஅறியாது புலம்பினார்-
தேன் அகத்தமலர் பல சிந்திய
கானகத்து மயில்அன்ன காட்சியார்

     தேன் அகத்தமலர் பல சிந்திய - தேனைத் தன்னுள்ளேஅடக்கிய
பலவகையான மலர்கள் சிதறி விழப்பெற்ற; கானகத்து
 மயில்
அன்னகாட்சியார் -
காட்டிலே (தம்விருப்பின்படி விளையாடுகின்ற)
மயில்  போன்ற சாயலை உடைய மகளிர்கள்; நெடும் புகை - நெடுந்தூரம்
பரந்த புகை; வானகத்தை மாய்த்தலால் - ஆகாயத்தை மறைத்ததனால்;
போனதிக்கு அறியாது - (தம் கணவர் உயர எழுந்து) போன திசையைத் தாம்இன்னதென்று உணராமல்; புலம்பினார் - வாய்விட்டு அழுவாராயினார்.

     வானையும் மறைத்தபுகையில், தம் கணவர் உய்ந்து போன திசை
தெரியாது மகளிர்கள் வருந்தினர் என்க. மாய்த்தல் - மறைத்தல்.       (4)