5954.

உரையின்முந்து உலகு உண்ணும் எரிஅதால்,
வரை நிவந்தனபல் மணி மாளிகை
நிரையும் நீள்நெடுஞ் சோலையும் நிற்குமோ ?
தரையும் வெந்தது,பொன் எனும் தன்மையால்.

     உரையின்முந்து உலகு உண்ணும் எரி அதால் - (சான்றோர்)
சுடுமொழியினும் விரைவாக உலகை அழிக்கக் கூடிய நெருப்பானமையால்;
வரை நிவந்தன பல் மணி மாளிகை நிரையும் - மலை போல் உயர்ந்த பல
மணிகளால் இயன்ற மாளிகைகளின் வரிசைகளோடும்; நீள் நெடும்
சோலையும் -
நீண்டுயர்ந்த சோலைகளோடும்; நிற்குமோ - எரிந்து
நிற்குமோ? (நில்லாது); பொன் எனும் தன்மையால் தரையும் வெந்தது -
(அவைநின்ற) நிலமும் பொன் மயமாக இருத்தலினால் வெந்து உருகிவிட்டது.

    இலங்காபுரியிலுள்ள மாளிகையின் தளவரிசைகள் பொன்மயமானதால்,
சோலைகள் எரியும் போதே, தரையும் வெந்து அழிந்தது.              (12)