5972. | மினைப்பரந்து எழு கொழுஞ் சுடர் உலகு எலாம் விழுங்கி, நினைவு அரும்பெருந் திசை உற விரிகின்ற நிலையால், சினைப்பரந்து எரி சேர்ந்திலா நின்றவும், சில வெங் கனல் பரந்தவும்,தெரிகில-கற்பகக் கானம். |
மினை பரந்து எழுகொழும் சுடர் - மின்னலைப் போல ஒளிபரவி எழும் செழுமையான அனல் கொழுந்து; உலகு எலாம் விழுங்கி - உலகம் முழுவதையும் தன்னுள் அடக்கிக் கொண்டு; நினைப்பு அரும் பெரும் திசை உற - நினைப்பதற்கு அரிய பெரிய திசைகளைப் போய் அடைய; விரிகின்ற நிலையால் - பரந்து விளங்கும் தன்மையால்; கற்பகம் கானம் வெங்கனல் பரந்த சிலவும் - கற்பகச் சோலைகள் கொடிய நெருப்புப் பற்றி எரிகின்றவை இவை சில என்றும்; சினை பரந்து எரி சேர்ந்திலா நின்ற சிலவும் - கிளைகளில் தாவி நெருப்புப் பற்றாது நின்றவை இவை சில என்றும்; தெரிகில - வேறுபாடு அறிய வொண்ணாதனவாயிருந்தன. இலங்கையில் இருந்தகற்பகச் சோலைகள் இயற்கையில் ஒளியுடைமையால்அனுமன் இட்ட தீயால் எரிந்தவை இவை என்றும் எரியாதவை இவை என்றும்அறிந்து கொள்ள முடியாதபடி விளங்கின என்பதாம். போந்து - போல;சினைப் பரந்து- கிளைகளில் தாவி. (30) |