யானைகள் ஓடல் 5978. | செய்தொடர்க் கன வல்லியும், புரசையும், சிந்தி, நொய்தின்,இட்ட வன் தறி பறித்து, உடல் எரி நுழைய, மொய் தடச்செவி நிறுத்தி, வால் முதுகினில் முறுக்கி, கை எடுத்துஅழைத்து ஓடின-ஓடை வெங் களி மா. |
ஓடை வெம் களிமா- நெற்றிப் பட்டம் அணிந்த கொடிய யானைகள்; உடல் எரி நுழைய - தமது உடலில் நெருப்புப் புகுந்து எரிய; தொடர் செய் கன வல்லியும் - சங்கிலியாகச் செய்யப்பட்ட கனமான பூட்டு விலங்கையும்; புரோசையும் சிந்தி - கழுத்தில் இடப்பட்ட கயிற்றையும் சிதறவிட்டு; இட்ட வல் தறி நொய்தின் பறித்து - தம்மைக் கட்டியிருந்த வலிய தூண்களை எளிதில் பிடுங்கி எறிந்துவிட்டு; மொய் தட செவி நிறுத்தி - வலிய அகன்ற தமது காதுகளை மேலே தூக்கி நிறுத்தி; வால் முதுகினில் முறுக்கி - வாலை முதுகின் மேல் முறுக்கி நீட்டி; கை எடுத்து அழைத்து ஓடின - தமது துதிக்கையைத் தூக்கி, வாய்விட்டுக் கதறிக் கொண்டு பயந்து ஓடின. தீ, பற்றியயானைகளின் செயல்கள் கூறப்பட்டன. தொடர் - சங்கிலி; பலகரணைகள் ஒன்றாகத் தொடுக்கப்பட்டமையால் தொடர் எனப்பட்டது. (36) |