எரியையும்அனுமனையும் பற்றி வர இராவணன் கட்டளை இடுதல் 

வஞ்சித் துறை 

5989.

'உண்டநெருப்பைக்
கண்டனர்பற்றிக்
கொண்டு அணைக'என்றான்-
அண்டரைவென்றான்.

     அண்டரைவென்றான் - முன்பு தேவர்களைவென்றவனான
இராவணன்; உண்ட நெருப்பை - இலங்கையை எரித்த அக்கினித்தேவனை;
கண்டனர் பற்றி கொண்டு அணைக என்றான் -
பார்த்தவர்கள் பிடித்துக்
கொண்டு இங்கே வருவீர்களாக என்று ஆணையிட்டான்.

     இராவணன் ஆணைக்குஅஞ்சியிருந்த அக்கினி தேவன், இப்போது,
ஆணையை  மீறிச் செயல்பட்டதனால், அவனைத் தண்டிக்க வேண்டி,
பிடித்துக் கொண்டு வருமாறு அரக்கர்களுக்குக் கட்டளையிட்டான் என்பதாம்.
                                                          (47)