5994. | விண்ணினை,வேலை விளிம்பு ஆர் மண்ணினை, ஓடிவளைந்தார்; அண்ணலை நாடிஅணைந்தார்; கண்ணினின் வேறுஅயல் கண்டார். |
விண்ணினை -வானத்தையும்; வேலை விளிம்பு ஆர் மண்ணினை -கடலின் விளம்பிலே (ஓரத்திலே) பொருந்தியுள்ள இலங்கைப் பூமியையும்; ஓடிவளைந்தார் - ஓடிச் சென்று சூழ்ந்து கொண்டவர்களாய்;அண்ணலை நாடி அணைந்தார் - பெரியோனாகிய அனுமனைத் தேடி நெருங்கி; அயல் வேறு கண்ணினின் கண்டார் - ஒரு பக்கத்தில் (அனுமனை) தனியே (தமது) கண்களால் பார்த்தார்கள். (52) |