பிராட்டியின்திருவடிகளை வணங்கி,
அனுமன் மீள, அழலும்மறைதல் 

6003.

விட்டுஉயர் விஞ்சையர், 'வெந் தீ
வட்ட முலைத் திருவைகும்
புள் திரள்சோலை புறத்தும்
சுட்டிலது' என்பதுசொன்னார்.

     விட்டு உயர்விஞ்சையர் - அவ்விடம் விட்டு மேலேசென்ற
வித்தியாதரர்; வெம் தீ - அனுமன் வாலில் வைத்த கொடிய நெருப்பு,
(அனைத்தையும் எரித்த நெருப்பு); வட்ட முலை திரு வைகும் புள் திரள்
சோலை புறத்தும் சுட்டிலது -
வட்டமான முலையை உடைய திருமகள்
(சீதை) இருக்கின்ற பறவைக் கூட்டம் நிறைந்த சோலையின், வெளியிடத்தைக்
கூட சுடவில்லை; என்பது சொன்னார் - என்ற செய்தியை வியப்பாகத்
தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.                            (61)